பிரிந்தவர் மீண்டும் ஒன்றுபட
துணையும் தொழும் தெய்வமும்,
பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட
வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்பசிலையும் மென்
பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரி
ஆவது அறிந்தனமே (2)